Friday, 24 October 2014
தலைமுடி நன்கு வளர
பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும்
சரி தலைமுடி உதிர்தல் ஒரு பெரிய
பிரச்சனையாகவே உள்ளது. தலைமுடி
அடர்த்தியாகவும் நன்கு நீளமாகவும்
வளர்வதற்கான சில ஆயுர்வேத மருத்துவ
குறிப்புக்களை பார்க்கலாம்.
*வெந்தயம், குன்றிமணி இவை இரண்டையும் போடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பலன் கிடைக்கும்.
* செம்பரத்தை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தடவிவர முடி நன்கு வளரும்.
*கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.
*காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.
*கோபுரம் தாங்கி இலைச்சாறு நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் பூசி தலைமுழுகினால் தலைமுடி உதிராது.