Friday, 24 October 2014

முகப்பரு நீங்க



 


முகத்தில் பருக்கள் வந்தாலே முகத்தின் அழகையே கெடுத்துவிடும். முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகளுக்கான் சில மருத்துவ குறிப்புகளை பார்ப்போம்:


*மஞ்சள் தூள்,  சோற்றுக்கற்றாளை இரண்டையும் சேர்த்து அரைத்து பூச பரு மறையும்.

*அவரை இலைச்சாறு தினமும் முகத்தில் பூசி காயவைத்து குளித்துவந்தால்  முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்கும். முகம் பளபளக்கும்.

*கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவிவர இரண்டு நாட்களில் பருக்கள் மறையும்.

*சந்தனம், மிளகு, ஜாதிக்காய் மூன்றும் சேர்த்து தடவ பருக்கள் குணமாகும்.

ஆஸ்துமா குணமாக





*தூதுவளை பொடியும் கொன்றைப்பட்டை பொடியும் சம அளவு எடுத்து அரை ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட ஆஷ்துமா தீரும்.

*மிளகு, வெங்காயம், பூண்டு, நொச்சி இலை நான்கும் சேர்த்து மென்று விழுங்கிவர  தீரும்.

*வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று நீர் பருகி வரவும்.

*மிளகு, இஞ்சி, வெள்ளருக்கு பூ இவை மூன்றும் சேர்த்து கஷாயம்      
செய்து குடிக்கலாம்.

தலைமுடி நன்கு வளர


பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும்
சரி தலைமுடி உதிர்தல் ஒரு பெரிய
பிரச்சனையாகவே உள்ளது. தலைமுடி
அடர்த்தியாகவும் நன்கு நீளமாகவும்
வளர்வதற்கான சில ஆயுர்வேத மருத்துவ
குறிப்புக்களை பார்க்கலாம்.



 *வெந்தயம், குன்றிமணி இவை இரண்டையும் போடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பலன் கிடைக்கும்.

* செம்பரத்தை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தடவிவர முடி நன்கு வளரும்.

*கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து  வரலாம்.

*காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.

*கோபுரம் தாங்கி இலைச்சாறு நல்லெண்ணெயில்  காய்ச்சி தலையில் பூசி தலைமுழுகினால் தலைமுடி உதிராது.